நாக்பூர் மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை [6] இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெற்களையும் இழந்து 47 ஓவர்களில் 248 ஓட்டங்கள் எடுத்தது. கப்டன் ஜாஸ் பட்லர் 51 ஓட்டங்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய தரப்பில், ஜடேஜா அறிமுக வீரர் ரானா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
249 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தடிய இந்தியா 38 ஓவர்களில் 6 விக்கெஏகளை இழந்து 251 ஓட்டங்கள் எடுத்தது கப்டன் ரோகித் சர்மா 2 ஜெய்ஸ்வால் 15 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். சுப்மன் கில் அபாரமாக விளையாடி 87 ஓட்டங்கள் அடித்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 59 , அக்சர் பட்டேல் 52 ஓட்டங்கள் அடித்தனர்.
சுப்மன் கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். , இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் வரும் 9ம் திகதி நடைபெற உள்ளது.
Trending
- ட்ரம்பின் ஆசைப்படி இடிக்கப்படும் வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி
- யாழ். போதனா வைத்தியசாலை படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
- ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அமைச்சுக்களின் பொறுப்புக்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி
- அமெரிக்கர்களின் உயிரை பறிக்க வந்த கப்பல் – குண்டுவீசி தகர்த்த அமெரிக்கா
- ஹிக்கடுவையில் துப்பாக்கிசூடு
- இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை குறைந்துள்ளது
- செயலிழந்த அரச இணைய சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பின
- இன்றைய வானிலை