Thursday, November 6, 2025 4:20 pm
மிஸ் யுனிவர்ஸ் போட்டியை நடத்தும் தாய்லாந்தை சேர்ந்த ஒரு அதிகாரி மிஸ் மெக்ஸிகோவை பகிரங்கமாக கண்டித்ததை அடுத்து, போட்டிக்கு முந்தைய விழாவில் பல போட்டியாளர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்த சம்பவம் நடந்தபோது, மிஸ் யுனிவர்ஸ் தாய்லாந்தின் இயக்குனர் நவத் இட்சரகிரிசில், ப்ரோமோஷன் கன்டன்டை அப்லோட் செய்யாததற்காக பாத்திமா போஷை திட்டினார்.
அவரை “முட்டாள் (dumbhead)” என்று அழைத்துள்ளார். போஷ் இந்த வார்த்தை பிரயோகத்தை எதிர்த்தபோது, இட்சரகிரிசில் பாதுகாப்புப் பிரிவினரை அழைத்து, போஷை ஆதரிப்பவர்களை தகுதி நீக்கம் செய்வதாக மிரட்டினார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு, போஷ் ஒற்றுமையுடன் சில போட்டியாளர்களுடன் அறையை விட்டு வெளியேறினார்.
நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட மோதலின் வீடியோ ஆன்லைனில் வைரலாகியுள்ளது.
அந்தக் காட்சிகளில், பல போட்டியாளர்கள் இட்சராகிரிசிலை நோக்கிக் கத்துவதைக் கேட்க முடிந்தது.
அதோடு, அவர் போஷைக் கண்டித்து, பேசுவதை நிறுத்தச் சொல்லி மீண்டும் மீண்டும் கூறுகிறார்.
தொடர்ந்து போஷிற்கு ஆதரவளிப்பவர்கள் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அவர் மிரட்டிய போதிலும், பல பெண்கள் நின்று கொண்டே இருந்தனர், மேலும் சிலர் போஷுக்கு ஆதரவாக வெளியேறும் பாதையை நோக்கி சென்றனர். மரியாதை இல்லாத நடத்தையை காட்டினார்” என்றார்.
வெளிநடப்பு செய்தவர்களில் டென்மார்க்கைச் சேர்ந்த மிஸ் யுனிவர்ஸ் விக்டோரியா க்ஜேர் தெயில்விக் என்பவரும் ஒருவர்.
போட்டியை நடத்துவதை பொறுப்பேற்கவும், இட்சராகிரிசிலின் பங்கேற்பை முடிந்தவரை கட்டுப்படுத்தவும் MUO ஒரு குழுவை அனுப்பியுள்ளது. சர்ச்சை இருந்தபோதிலும், மிஸ் யுனிவர்ஸ் போட்டி பாங்காக்கில் நடைபெறும்.
வரவேற்பு வைபவத்தில் போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றியாளருக்கு நவம்பர் 21 ஆம் திகதி முடிசூட்டப்படும்.

