மின்வெட்டு காரணமாக ஏற்பட்டுள்ள இழப்புகளை இலங்கை மின்சார சபை மதிப்பீடு செய்து பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சிறு நிறுவன உரிமையாளர்கள் சங்கம்/சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் சங்க தேசிய அமைப்பாளர் நிலுக்ஷ குமார கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மைக்கால வரலாற்றில் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுவதற்கு இலங்கை மின்சார சபை பலமுறை தவறியுள்ளது. நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடையால் ஆறு முதல் ஏழு மணித்தியாலங்களுக்கு உற்பத்தி நிறுத்தப்பட்டது., இதன் விளைவாக சிறுதொழில்களுக்கு கணிசமான நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
“நாங்கள் மின்சாரத்தையே பெரிதும் நம்பியுள்ளோம். எனவே, பெப்ரவரி 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடை எமக்கு கணிசமான நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இழப்பை மதிப்பீடு செய்து நுகர்வோருக்கு இழப்பீடு வழங்குமாறு நாம் மின்சார சபையை வலியுறுத்துகிறோம். சட்டங்களின்படி, அத்தகைய இழப்புகளுக்கு வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அவர்கள் கடமைப்பட்டுள்ளனர்,” என்றார்.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை