நஷ்டத்தில் இயங்கும் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை விமான பராமரிப்பு மையமாக மாற்றபோவதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (07) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
பட்ஜெட் மீதான குழுநிலை விவாதத்தின் போது பேசிய அமைச்சர், மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை இலாபகரமான முயற்சியாக மாற்றுவதற்கு பொருத்தமான வெளிநாட்டு கூட்டாளியுடன் ஒத்துழைக்க அரசாங்கம் விரும்புவதாகக் கூறினார்.
“இந்த விமான நிலையம் ரூ. 36.5 பில்லியன் செலவில் கட்டப்பட்டது, கடந்த ஐந்து ஆண்டுகளில், இது மொத்தம் ரூ. 38.5 பில்லியன் இழப்பைச் சந்தித்துள்ளது. இதை ஒரு லாபகரமான நிறுவனமாக மாற்றுவதே எங்கள் குறிக்கோள்” என்று அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் இந்த முயற்சி, மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் உள்கட்டமைப்பை விமான பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புக்காகப் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறது, இது உலகளாவிய விமான நிறுவனங்களை ஈர்க்கும்.
Trending
- முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்ட முக்கிய பதவி
- சிறைக்கு செல்கிறார் பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி!
- அனர்த்த முகாமைத்துவக் குழு மூலம் வழங்கப்பட வேண்டிய சேவைகளை அவசரமாக முன்னெடுக்கவும்
- ஜப்பானில் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி தெரிவு
- பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை இளஞ்சிவப்பு ஆடை அணிந்து வர தீர்மானம்
- இன்றைய ராசிபலன் – 21.10.2025
- சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- ட்ரம்பின் ஆசைப்படி இடிக்கப்படும் வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி