வடக்கு மாசிடோனியா இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் கொல்லப்பட்டனர் 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். விடுதியின் உரிமையாளர், அரசு அதிகாரிகள் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
உள்ளூர் இசைக்குழுவான டிஎன்கே நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டது. அரங்கத்திற்குள் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் கூரை தீப்பிடித்து எரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களில் 18 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக உள்துறை அமைச்சர் பஞ்சே தோஷ்கோவ்ஸ்கி உறுதிப்படுத்தினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில், ஹிப்-ஹாப் இசைக்குழுவான டிஎன்கே-வின் உறுப்பினரான விளாடிமிர் பிளாசெவ்ஸ்கியும் ஒருவர், அவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டாலும், அவரது உடல்நிலை சீராக உள்ளது.
கிளப்பின் உரிமையாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
பிரதமர் ஹிருஸ்டிஜன் மிக்கோஸ்கி தனது திட்டமிடப்பட்ட மாண்டினீக்ரோ பயணத்தை ரத்து செய்துவிட்டு அவசரகால முயற்சிகளை மேற்பார்வையிட கோகானிக்குச் சென்றார். நீதி அமைச்சர் இகோர் ஃபில்கோவ் பொறுப்புக்கூறலுக்கு அழைப்பு விடுத்துள்ளார், இதுபோன்ற ஒரு துயரம் மீண்டும் ஒருபோதும் நடக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை