‘போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா தயாராக உள்ளது. சமாதானம் செய்ய ரஷ்யஜனாதிபதி புட்டின் தயாராக இருக்கிறார்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புட்டினை அலாஸ்காவில் சந்தித்து பேச உள்ளார். அப்போது 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர ட்ரம்ப் வலியுறுத்த இருக்கிறார்.
நான் 6 மாதங்களுக்குள் 6 போர்களைத் தீர்த்துவிட்டேன். இந்தியா-பாகிஸ்தான் போரின் போது 6 முதல் 7 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அவை அணு ஆயுதம் ஏந்தத் தயாராக இருந்தன. நாங்கள் அதைத் தீர்த்தோம். போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா தயாராக உள்ளது.
சமாதானம் செய்ய புட்டின் தயாராக இருக்கிறார். அதேபோல், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சமாதானம் செய்வார் என்று நான் நினைக்கிறேன். அலாஸ்காவில் புட்டினுடனான ஒரு முக்கியமான சந்திப்பு என்றார்.