மாத்தறை மாலிம்பட பொலிஸ் நிலையத்தில் பணியாற்றியபோது இளைஞனை சித்திரவதை செய்த வழக்கில் குற்றம் சாட்டம் பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட வீரகெட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு பொலிஸ் அதிகாரிகளின் பதில் பொலிஸ்மா அதிபர் இன்று செவ்வாய்க்கிழமை (04) பணி நீக்கம் செய்துள்ளார்.
மாத்தறை, மாலிம்பட பொலிஸ் நிலையத்தில் பணியாற்றியபோது தில்ஷான் மதுசங்க என்ற இளைஞன் கைது செய்யப்பட்டு ஆறு நாட்கள் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் இந்த அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தார்.
வீரகெட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, கும்புறுபிட்டிய பல்வேறு முறைப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி ,கல்கிஸ்ஸை பொலிஸ் சார்ஜென்ட் ஆகியோரே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நான்கு பொலிஸ் அதிகாரிகளையும் தலா 25,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு மாத்தறை மேல் நீதிமன்றம் ஜனவரி 27 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.
நிலையில் வழக்கு விசாரணை பெப்ரவரி 27 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Trending
- முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்ட முக்கிய பதவி
- சிறைக்கு செல்கிறார் பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி!
- அனர்த்த முகாமைத்துவக் குழு மூலம் வழங்கப்பட வேண்டிய சேவைகளை அவசரமாக முன்னெடுக்கவும்
- ஜப்பானில் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி தெரிவு
- பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை இளஞ்சிவப்பு ஆடை அணிந்து வர தீர்மானம்
- இன்றைய ராசிபலன் – 21.10.2025
- சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- ட்ரம்பின் ஆசைப்படி இடிக்கப்படும் வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி