ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையுடன் இணைக்கப்பட்ட ஒரு சிறப்பு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ,கிளாக்கர் ஆகியோர் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்றாம் தரப்பினர் மூலம் அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இருவரும் கைது செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.