தெற்கு இஸ்ரேலிய நகரமான பீர்ஷெபாவில் உள்ள சொரோகா மருத்துவமனை ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணையால் தாக்கப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“மருத்துவமனைக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது காயங்கள் உட்பட சேதத்தை நாங்கள் மதிப்பிட்டு வருகிறோம். இந்த நேரத்தில் பொதுமக்கள் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று மருத்துவமனை அதிகாரி ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக நாடு முழுவதும் சைரன்கள் ஒலித்தன, மேலும் மத்திய இஸ்ரேலில் பல உரத்த குண்டுவெடிப்புகளும் கேட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன, மேலும் பல நேரடித் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது வெடிப்புகள் கேட்டன.
இந்தத் தாக்குதலில் 40 பேர் காயமடைந்துள்ளனர். இருவர் படுகாயமடைந்துள்ளனர்.