கொழும்பில் நடைபெற்ற சீன-இலங்கை கூட்டு வர்த்தக மற்றும் பொருளாதார ஆணையத்தின் எட்டாவது கூட்டத்தின் போது, பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனாவும் இலங்கையும் இரண்டு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோவும் இலங்கை வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவும் கூட்டாகத் தலைமை தாங்கினர்.
பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, வர்த்தக வசதி பணிக்குழுவை நிறுவுவதற்கும் ,தொழில்துறை மற்றும் விநியோகச் சங்கிலி ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் என இரண்டு ஒப்பந்தங்கை கைச்சாதிடப்பட்டன.
இருதரப்பு பொருளாதார உறவுகளை ஆழப்படுத்துவதில் இந்த ஒப்பந்தங்கள் ஒரு புதிய படியைக் குறிக்கின்றன என்று இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.