இந்திய கடற்படைக் கப்பலான குத்தார், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குக்ரி வகுப்பு கொர்வெட், மூன்று நாள் பயணமாக நேற்று திங்கட்கிழமை [3] கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இலங்கை கடற்படை இசைக்குழு மற்றும் அதிகாரிகளின் இசையுடன் கப்பல் பாரம்பரிய முறையில் வரவேற்கப்பட்டது. வந்தடைந்ததும், கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் நிதின் சர்மா, மேற்கு கடற்படைப் பகுதி தளபதி ரியர் அட்மிரல் எம்.எச்.சி.ஜே. சில்வாவை சந்தித்தார்.
இந்திய கடற்படைக் கப்பலான குத்தாரின் வருகை, பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பின் பகிரப்பட்ட சவால்களை திறம்பட எதிர்கொள்வதற்காக இலங்கை கடற்படையின் திறன்களை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்தக் கப்பல் மார்ச் 06, ஆம் திகதி புறப்பட உள்ளது.
Trending
- இந்திய எதிர்ப்பால் பாகிஸ்தானுடனான கடற்பயிற்சி இரத்து
- அனல் மின் மாஃபியாவின் கைப்பாவையாக அரசாங்கம் மாறிவிட்டது – சஜித்
- எதிர்க்கட்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படாது என்று கூறவில்லை – ஜனாதிபதி
- இன்று ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
- டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 4 பேர் பலி
- கொங்கோவில் தீக்கிரையான கப்பல்148 பேர் பலி பலரைக் காணவில்லை
- கலைமகள் விளையாட்டு கழகம் சம்பியனானது
- பவன் கல்யானின் மகன் உட்பட 22 பேரை காப்பாற்றிய இளைஞர்களுக்கு கெளரவம்