இந்திய கடற்படைக் கப்பலான குத்தார், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குக்ரி வகுப்பு கொர்வெட், மூன்று நாள் பயணமாக நேற்று திங்கட்கிழமை [3] கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இலங்கை கடற்படை இசைக்குழு மற்றும் அதிகாரிகளின் இசையுடன் கப்பல் பாரம்பரிய முறையில் வரவேற்கப்பட்டது. வந்தடைந்ததும், கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் நிதின் சர்மா, மேற்கு கடற்படைப் பகுதி தளபதி ரியர் அட்மிரல் எம்.எச்.சி.ஜே. சில்வாவை சந்தித்தார்.
இந்திய கடற்படைக் கப்பலான குத்தாரின் வருகை, பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பின் பகிரப்பட்ட சவால்களை திறம்பட எதிர்கொள்வதற்காக இலங்கை கடற்படையின் திறன்களை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்தக் கப்பல் மார்ச் 06, ஆம் திகதி புறப்பட உள்ளது.
Trending
- பொம்மைக்குள் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
- செம்மணியில் வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் போராட்டம்
- போலி நாணயத்தாள்களுடன் சீன பிரஜை கைது
- ட்ரம்பின் வரியால் வோக்ஸ்வாகனுக்கு 1.5 பில்லியன்டொலர் இழப்பு
- காஸாவுக்கு உதவ ஜோர்தான் விமானங்கள் தயார்
- அமெரிக்காவில் வெப்பநிலை அதிகரிப்பு
- இலங்கை தொழிலாளிக்காக கண்டனம் தெரிவித்த கொரிய ஜனாதிபதி
- இலங்கையில் அதிகரிக்கிறது சைபர் குற்றம்