கொழும்பு நகரம், கோட்டை, கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் சிக்குன்குனியா பரவுவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மார்ச் 14 ஆம் திகதி நிலவரப்படி, வாராந்திர தொற்றுநோயியல் அறிக்கையின்படி, கொழும்பு, கம்பஹா , கண்டி ஆகிய இடங்களில் இருந்து 173 சிக்குன்குனியா நொயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர். 1960 ஆம் ஆண்டு சிக்குன்குனியா வைரஸ் இலங்கைக்கு பரவியதாக சுகாதார அமைச்சின் சமூக மருத்துவர், ஆலோசகர் டாக்டர் குமுது வீரகோன் தெரிவித்தார்.
கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் ஆலோசகர் குழந்தை மருத்துவரான டாக்டர் தீபால் பெரேரா கூறுகையில், சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.”இந்த சூழ்நிலையைச் சமாளிக்க, உங்கள் வீடுகள், கதவுகள் ,ம் பள்ளி வளாகங்களை தொடர்ந்து சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்,” என்று கூறினார்.
Trending
- கொழும்புதுறைமுகத்தில் அமெரிக்க போர்க் கப்பல்
- விசாரணை வளையத்தில் கம்மன்பில்
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு