நெடுந்தீவுக்கு சேவையில் இருந்த குமுதினி படகில் பயணம் சென்றவர்களைப் படுகொலை செய்த 40 வது ஆண்டு நினைவேந்தல் நேன்று வியாழக்கிழமை [15] காலை நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத் தூபியில் நடைபெற்றது.
பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி நிகழ்வு உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியும்,உயிரிழந்தவர்களின் நினைவாக மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
1985ம் ஆண்டு நெடுந்தீவு மாவிலித்துறை முகத்தில் இருந்து புங்குடுதீவு குறிகாட்டுவான் நோக்கி குமுதினி படகில் மக்கள் சென்ற போது கடற்படையினர் இடை மறித்து குழந்தை ,பெண்கள் ,அடங்கலாக உட்பட 36 பேரைநடுக்கடலில் வைத்து வெட்டிப் படுகொலை செய்தனர்.
Trending
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு
- ஆறு மில்லியன் மக்கள் இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்
- மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐ.நா.தலைவர் கண்டனம்