மனிதாபிமான நிவாரணத்தை எளிதாக்கும் நோக்கில், ஜூலை 27, ஆம் திகதி முதல் காஸாபகுதியில் உள்ள அல்-மவாசி, டெய்ர் அல்-பாலா ,காஸா நகரம் ஆகிய மூன்று முக்கிய பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளில் இஸ்ரேலிய இராணுவம் தக்குதல் செய்யப்போவதிலை என அறிவித்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) அறிக்கையின்படி, இந்த இடைநிறுத்தங்கள் ஒவ்வொரு நாளும் உள்ளூர் நேரப்படி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை ஏற்படும். மறு அறிவிப்பு வரும் வரை தொடரும்.
இந்த இடைநிறுத்தங்கள் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட மண்டலங்களில் மனிதாபிமான உதவிகளைப் பாதுகாப்பாக வழங்க உதவுவதற்காகவே நோக்கமாகக் கொண்டவை என்றும், காஸாவின் பிற பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்றும் IDF கூறியது.