Sunday, February 8, 2026 7:36 am
கிரீன்லாந்தின் தலைநகரான கிரீன்லாந்தில் வெள்ளிக்கிழமை கனடாவும் ,பிரான்ஸும் தூதரகங்களைத் திறந்தன்.நேட்டோ நட்பு நாடான டென்மார்க் ,ஆர்க்டிக் தீவு ஆகியவற்றுக்க்கு ஆதரவைக் காட்டுகின்றன, அரை தன்னாட்சி பெற்ற டேனிஷ் பிரதேசத்தின் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கான அமெரிக்க முயற்சிக்கிறது.
கனடாவின் வெளியுறவு மந்திரி அனிதா ஆனந்த், தூதரகத்தைத் திறந்து வைத்தார். இது காலநிலை நெருக்கடி , இன்யூட் உரிமைகள் போன்ற பிரச்சினைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க உதவும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அவருடன் கனடாவின் பூர்வீக கவர்னர் ஜெனரல் மேரி சைமனும் இணைந்தார்.
ஜீன்-நோயல் போயர் நாட்டின் தூதரக ஜெனரலாகப் பொறுப்பேற்பார் என்று பிரான்ஸின் வெளியுறவு அமைச்சுக் கூறியது, இது கிரீன்லாந்தில் ஒரு துணைத் தூதரக ஜெனரலை நிறுவிய முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடாக மாறும்.
கிரீன்லாந்தை கையகப்படுத்துவது குறித்து ட்ரம்ப் பேசுவதற்கு முன்பு – 2024 இல் கிரீன்லாந்தில் ஒரு தூதரகத்தைத் திறப்பதாக கனடா உறுதியளித்திருந்தது. மோசமான வானிலை காரணமாக நவம்பர் முதல் முறையான பதவியேற்பு தாமதமானது.

