கொழும்பு மாநகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் வ்ரை கலி பல்தசார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மாநகர சபையின் முதல் அமர்வு, உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜயசுந்தர தலைமையில் இன்று திங்கட்கிழமைநடைபெற்றது.
117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் 61 விராய் கெலி பல்தஸார் 61 வாக்குகளையும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ரீசா ஷரூக் 54 வாக்குகளைப் பெற்றுக்கொண்டனர். இரண்டு வாக்குகள் நிராகரிக்கப்பட்டன
கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயராக தேசிய மக்கள் சக்தியின் ஹேமந்த குமார தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேயர் தெரிவு இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படுமா அல்லது திறந்த வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படுமா என்பது தொடர்பில் சபையில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
மாநகர சபையின் மேயர் தெரிவு முறைமை தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி ஆகியன பகிரங்க வாக்கெடுப்பு நடத்துமாறு கோரிக்கை விடுத்தன. தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர்கள் இந்த முன்மொழிவை எதிர்த்தனர்.
நீண்ட நேர வாதப் பிரதிவாதங்களுக்கு பின்னர், நேரடியாக கொழும்பின் புதிய மேயரைத் தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பை நடத்துவதற்கான முன்மொழிவு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் ஆட்சியை அமைப்பதற்கு ஒரு கட்சிக்கு 59 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
எந்தவொரு கட்சியும் 50 சதவீதத்திற்கு மேல் பெரும்பான்மையை பெறாமையால், கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி சார்பில் 48 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 29 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 13 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் 5 உறுப்பினர்களும் தெரிவாகினர்.