இந்தோனேஷியாவில் புதிதாகக் கட்டப்பட்ட முருகன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 2 ஆம்திகதி வியாழக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஜகார்த்தாவில், ‘ஶ்ரீசனாதன தர்ம ஆலயம்’ என்னும் பெயரில் முருகப்பெருமானுக்குக் கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த விழாவை ஜகார்த்தா ஆளுநர் தலைமையேற்று நடத்தினார். அந்த நிகழ்வில் மக்களவை உறுப்பினர்கள், இந்தியத் தூதர் மற்றும் பல்வேறு மத, கலாசார அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். ஆலயத்தில் முருகப்பெருமான், விநாயகர், கன்னிகா பரமேஸ்வரி, சிவன் – பார்வதி, மகாவிஷ்ணு – லட்சுமி, பக்த ஆஞ்சநேயர், நவகிரகங்கள், அகஸ்திய முனிவர், இடும்பன் ஆகிய தெய்வங்களுக்குத் தனிச்சந்நிதிகள் அமைந்துள்ளன.40 மீற்றர் உயரம் கொண்ட அழகிய கம்பீரமான ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
பாரம்பர்ய அருங்காட்சியகம் ஒன்றும் அமைப்பட இருக்கிறது. இந்தியா-இந்தோனேசியா கலாசாரத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
Trending
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு
- ஆறு மில்லியன் மக்கள் இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்
- மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐ.நா.தலைவர் கண்டனம்