புது தில்லியில் உள்ள இந்தியாவின் பாராளுமன்ற ஜனநாயக ஆராய்ச்சி , பயிற்சி நிறுவனத்தில் (PRIDE) திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்காக இந்த வார இறுதியில் இந்தியாவுக்குப் புறப்படும் 24 பங்கேற்பாளர்களைக் கொண்ட தொடக்கக் குழுவை இந்தியாவின் உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சந்தித்தார்.
பல்வேறு அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செயலாளர் நாயகம் உட்பட இலங்கை பாராளுமன்றத்தின் 4 அதிகாரிகள் அடங்கிய மாண்புமிகு துணை சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ் தலைமையிலான குழுவை இன்று இந்திய மாளிகையில் உயர் ஸ்தானிகர் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சி 2025 மே 26-30 வரை ஒரு வாரம் நீடிக்கும். சட்டமன்ற,பட்ஜெட் செயல்முறைகள், பாராளுமன்றக் குழுக்களின் அமைப்பு மற்றும் இரு ஜனநாயக நாடுகளுக்கும் இடையிலான பிற தொடர்புடைய விஷயங்களில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளும் கூறுகள் இதில் அடங்கும்.
Trending
- பாலஸ்தீன தடைக்கு எதிரான போராட்டங்களில் 70க்கும் மேற்பட்டோர் இலண்டனில் கைது
- விம்பிள்டன் சம்பியனானார் இகா ஸ்வியாடெக்
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி