மத்திய அரசின் சூழ்ச்சியே யாழ்ப்பாண மாநாகரில் எமது வேட்பு மனு நிராகரிப்புக்கு காரணம் எனக் குற்றம் சாட்டிய தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்ஷன் மனு நிராகரிப்புக்கு எதிராக வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றை நாடவுள்ளதாகத் தெரிவித்தார்.
ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது சுயேச்சைக் குழு உள்ளூராட்சி மன்ற யாழ்ப்பாணம், கோப்பாய், வேலணை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தது.
இதில் யாழ்ப்பாண மாநகர சபையின் பெண் வேட்பாளரது உறுதியுரை விடயம் தொடரிலான சர்ச்சையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் சட்டத்தின் பிரகாரமே வேட்புமனுவை சமர்ப்பித்திருந்தோம்.
எமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.சட்ட ஆலோசகர்களுடன் நாம் இந்த விடயம் தொடர்பாக நாம் சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை செய்துள்ளோம்.
அதன்படி தேர்தல் திணைக்களத்தின் இந்த அறிவுப்புக்கு எதிராக நாம் நியாயம் கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யவுள்ளோம் என்றார்.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!