மத்திய அரசின் சூழ்ச்சியே யாழ்ப்பாண மாநாகரில் எமது வேட்பு மனு நிராகரிப்புக்கு காரணம் எனக் குற்றம் சாட்டிய தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்ஷன் மனு நிராகரிப்புக்கு எதிராக வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றை நாடவுள்ளதாகத் தெரிவித்தார்.
ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது சுயேச்சைக் குழு உள்ளூராட்சி மன்ற யாழ்ப்பாணம், கோப்பாய், வேலணை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தது.
இதில் யாழ்ப்பாண மாநகர சபையின் பெண் வேட்பாளரது உறுதியுரை விடயம் தொடரிலான சர்ச்சையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் சட்டத்தின் பிரகாரமே வேட்புமனுவை சமர்ப்பித்திருந்தோம்.
எமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.சட்ட ஆலோசகர்களுடன் நாம் இந்த விடயம் தொடர்பாக நாம் சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை செய்துள்ளோம்.
அதன்படி தேர்தல் திணைக்களத்தின் இந்த அறிவுப்புக்கு எதிராக நாம் நியாயம் கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யவுள்ளோம் என்றார்.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு