களுத்துறை வடக்கு, பனாப்பிட்டியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவர், அடையாளம் தெரியாத குழுவினரால் அவரது வீட்டில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து கூர்மையான ஆயுதங்களால் தாக்கியபோது, அந்த நபர் தனது வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலத்த காயமடைந்த பாதிக்கப்பட்டவர் களுத்துறை நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை,
களுத்துறை பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.