அசாம் மாநிலத்தில் விவாகரத்து பெற்ற ஆண் ஒருவர் பாலில் குளித்து, கொண்டாடும் வீடியோ வைரலான அதே சமயத்தில், கேரளாவில் விவாகரத்து பெற்ற பெண்கள், குழுவாக சேர்ந்து சுற்றுலா சென்று விவாகரத்தை கொண்டாடி உள்ளனர்.
கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ரபியா அபி, விவாகரத்து பெற்ற பெண்களுக்கான குழு ஒன்றை உருவாக்கி, சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தார். மாநிலம் முழுவதிலும் இருந்து பல இளம்பெண்கள், இதற்கு சம்மதம் தெரிவித்து சுற்றுலாவில் பங்கு பெற்றனர்.
அவர்கள் ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம் என்று மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர். தங்களுக்கு விவாகரத்தான காரணம் பற்றி மற்ற பெண் தோழிகளிடம் பகிர்ந்து கொண்டனர்.
விவாகரத்தான பெண்களுக்கு வேடிக்கை பயணமாகவும் மற்றும் புதிய நம்பிக்கை, உறவுகளை உருவாக்கும் பயணமாகவும் இது அமைந்ததாக அவர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். அவர்கள் கொண்டாடும் வீடியோ வலைத்தளவாசிகளை வெகுவாக கவர்ந்தது.
Trending
- காணாமல் ஆக்கப்பட்ட 281 பேரின் பெயருடன் வெளியான அறிக்கை
- ‘பசுமை சைக்கிள் ஓட்டுதல் சுற்றுலா’ நிறைவடைந்தது
- பாடசாலை சீருடைத் துணியை வழங்கியது சீனா
- சிரியாமீது இஸ்ரேல் தாக்குதல்
- அமெரிக்க ரயில்களை ஹேக்கர்கள் முடக்கும் அபாயம்
- குப்பை வண்டியில் சென்ற உள்ளூராட்சி சபைத் தலைவர்கள்
- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் உறுப்பினருக்கு மரண தண்டனை
- நச்சு வாசனை திரவியத்தை நுகர்ந்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி