கட்டுநாயக்க விமான நிலையப் பகுதிக்குள் பட்டம் பறக்கவிடுவதை தவிர்க்குமாறு விமான நிலைய முகாமைத்துவ பிரிவின் பிரதானி அருண ராஜபக்ஷ பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த அறிவித்தலைப் புறக்கணிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
“விமான நிலையத்தைச் சுற்றி பட்டம் பறப்பது விமானங்களுக்கும் பயணிகளின் உயிருக்கும் கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது. எனவே, விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், 300 அடி உயரத்திற்கு மேல் பட்டம் விடப்பட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
Trending
- நெடுந்தீவில் பிடிபட்ட முதலை வன ஜீவராசிகள் அலுவலகத்தில் ஒப்படைப்பு
- மகளிர் உலகக் கிண்ண அரையிறுதிக்கு நான்கு அணிகள் முன்னேறின.
- உயர் தொழில்நுட்ப மருந்து சோதனை முறையை இலங்கைக்கு வழங்குகிறது அமெரிக்கா
- யாழில் இசைத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஆதரவு வழங்குவேன் : பாடகர் ஸ்ரீநிவாஸ்
- மாணவன் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட சம்பவம் : விசாரணைகள் ஆரம்பம்
- வட்டி மூலம் மட்டுமே 1000 கோடி ரூபா வருமானம்
- இஸ்ரேல் சிரியா போர் நிறுத்தம் அமெரிக்க தூதர் அறிவிப்பு
- வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு எதிராக 10 பில்லியன் கேட்டு ட்ரம்ப் வழக்கு தாக்கல்