எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்றைய தினம் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று (16) தபால் நிலையங்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.
வாக்காளர் அட்டைகளை ஏப்ரல் 20 ஆம் திகதி விநியோகிப்பதற்கான விசேட நாளாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
மேலும் இதுவரை பெறப்பட்ட வாக்காளர் அட்டைகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.