2025 ஜனவரி 20 ஆம் திகதி வரையில் ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்களில் 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய இராணுவத்தில் 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும் அவர்களில் யாரும் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என்றும் அவர்களின் உறவினர்களுடன் தொடர்பைப் பேணுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.
ரஷ்ய ராணுவத்தில் இணைந்த தமிழ் இளைஞர்களுக்கு என்ன நடந்தது எனவும் அவர்கள் இருக்கின்றார்களா இல்லையா? என்பது தொடர்பில் தகவலை வெளியிட சிறிதரன் எம்.பி கேள்வி எழுப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Trending
- கடமையை பொறுப்பேற்றார் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்
- நயினாதீவு நாகபூசனி திருவிழா
- யாழ்ப்பாண ஆளுநரைச் சந்தித்தார் மேயர்
- நல்லூரில் இருந்து ஆரம்பமானது சுற்றுச் சூழல் சுற்றுலா
- செல்வச் சந்நதியில் இருந்து கதிர்காமத்துக்கு விஷேட பஸ்சேவை
- அணு ஆயுதங்களை வேகமாக சேமிக்கிறது சீனா
- இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு பாலி விமானங்கள் இரத்து
- அமெரிக்காவில் பாகிஸ்தான் இராணுவத்தளபதி