முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய, தலைமை பாதுகாப்பு அதிகாரி அசோக அரியவன்ச, காங்கேசன்துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விக்ரமசிங்கவின் பிரதான தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக 15 ஆண்டுகள் உட்பட 23 ஆண்டுகள் அவரது பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றியுள்ளார்.