யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களாக பல்வேறு சைக்கிள்களின் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
குருநகர் பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவரே யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சில மாதங்களாக நல்லூர், யாழ்நகரபகுதி, கே.கே.எஸ்.வீதி போன்ற இடங்களிலிருந்து திருடப்பட்ட ஆண்கள் பயன்படுத்தும் ஐந்து சைக்கிள்களும் பெண்கள் பயன்படுத்தும் 11 சைக்கிள்களும் என 16 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டது.
மேலும் அவரது உடமையில் இருந்து ஹெரோயின் போதைப் பொருளும் மீட்கப்பட்டது.
சந்தேக நபரை யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சைக்கிள்களை தொலைத்த உரிமையாளர்கள் இருப்பின் தகுந்த அடையாளங்களை காண்பித்து சைக்கிள்களை பெற்றுக் கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.