இலங்கையின் நிர்வாக கட்டமைப்பில் முக்கிய அதிகாரியாக அறியப்பட்ட பிரட்மன் வீரக்கோன் தனது 94 ஆவது வயதில் காலமானார்.
1954ஆம் ஆண்டில் இலங்கை சிவில் சேவையில் இணைந்து நாட்டின் பல பகுதிகளிலும் பணியாற்றியுள்ளார். பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலவின் செயலாளராக பதவியேற்று, பின்னர் 2002 வரை தெரிவான 7 பிரதமர்கள், இரண்டு ஜனாதிபதிகளின் கீழ் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.
பிரட்மன் வீரக்கோன் தனது ஆரம்பக் கல்வியை களுத்துறை ஹோலி கிரோஸ் கல்லூரியில் மேற்கொண்டார். குருதலாவ புனித தோமஸ் கல்லூரியில் இடைநிலைக் கல்வியைப் பெற்று பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு பிரவேசித்தார்.
இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் சமூகவியலில் கௌரவப் பட்டத்தையும், அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் Fulbright புலமைப்பரிசிலைப் பெற்று சமூகவியலில் முதுகலைப் பட்டம் (MA) பட்டத்தையும் பெற்றுள்ளார்.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு