தெற்காசிய நாட்டிற்கு கஞ்சா கடத்தியதாக இங்கிலந்தின் முன்னாள் கபின் குழு உறுப்பினரான சார்லோட் மே லீ,இலங்கை விமான நிலையத்தில் கது செய்யப்பட்டார். இலங்கையில் கைது செய்யப்பட்ட பிரிட்டிஷ் பெண்ணுக்கு ஆதரவளிப்பதாக இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு லண்டனின் கூல்ஸ்டனைச் சேர்ந்த 21 வயதான சார்லோட் மே லீ, திங்கட்கிழமை பாங்கொங்கிலிருந்து விமானத்தில் வந்த பிறகு பண்டாரநாயக்க சர்வதேசவிமானநிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதாக மெயில்ஆன்லைன், சன் ஆகியன செய்தி வெளியிட்டுள்ளன.
46 கிலோ கஞ்சா வகை குஷ் அடங்கிய இரண்டு சூட்கேஸ்களை நாட்டிற்குள் கொண்டு வர முயன்றதாக இலங்கை அதிகாரிகளால் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
“இலங்கையில் கைது செய்யப்பட்ட ஒரு பிரிட்டிஷ் பெண்ணை நாங்கள் ஆதரிக்கிறோம், மேலும் அவரது குடும்பத்தினருடனும் உள்ளூர் அதிகாரிகளுடனும் தொடர்பில் இருக்கிறோம்” என்று இங்கிலாந்து வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
லீ, TUI-யின் முன்னாள் கேபின் குழு உறுப்பினராகவும், அதன் பின்னர் அழகுக்கலை நிபுணராகவும் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.