இலங்கையில் பற்றாக்குறையாக உள்ள சுமார் 30 மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை,இந்திய அரசாங்கங்களுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
விநியோகஸ்தர்களின் பிரச்சினைகள் காரணமாக சுமார் 30 மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார துணை அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி தெரிவித்தார்
இது தொடர்பாக அவர் மேலும்தெரிவிக்கையில்,
சில விநியோகஸ்தர்கள் சரியான நேரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட மருந்துகளை வழங்குவதில்லை. சில மருந்துகளுக்கான ஏலங்கள் ச்டமர்ப்பிக்கப்படவில்லை. இதனால் மருந்துகளின் பற்றாக்குறை உள்ளது. பெரும்பாலானவற்றுக்கு மாற்றீடுகள் கிடைக்கின்றன, ஆனால் சிலவற்றிற்கு மாற்று வழிகள் இல்லை,” என்று அவர் கூறினார்.
தேவையான மருந்துகளை வாங்குவதற்கு இந்திய அரசாங்கத்திற்கு இடையேயான ஒப்பந்தம் தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்துடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
தேவையான மருந்துகளை வாங்குவதற்கு அரசாங்கத்திற்கு இடையேயான ஒப்பந்தம் குறித்து இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்துடன் (HC) கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார். மருந்துகளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம்,” என்று அவர் விளக்கினார்.
Trending
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு
- ChatGPT க்கு போட்டியாக களமிறங்கிய இந்திய செயலி
- அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை