தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் இன்று (02) காலை 10.00 மணிக்கு யாழ் மருதனார்மடத்தில் நடைபெற்றது.
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா பிரகாஷ் தலமையில், யாழ் மருதனார்மடம் வலிகாமம் தெற்கு பிரதேச சபை முன்றலில் நடைபெற்றது.
இக் கையெழுத்து போராட்டத்தில் பிரதேச வாழ் மக்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.