நஷ்டத்தில் இயங்கும் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை விமான பராமரிப்பு மையமாக மாற்றபோவதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (07) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
பட்ஜெட் மீதான குழுநிலை விவாதத்தின் போது பேசிய அமைச்சர், மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை இலாபகரமான முயற்சியாக மாற்றுவதற்கு பொருத்தமான வெளிநாட்டு கூட்டாளியுடன் ஒத்துழைக்க அரசாங்கம் விரும்புவதாகக் கூறினார்.
“இந்த விமான நிலையம் ரூ. 36.5 பில்லியன் செலவில் கட்டப்பட்டது, கடந்த ஐந்து ஆண்டுகளில், இது மொத்தம் ரூ. 38.5 பில்லியன் இழப்பைச் சந்தித்துள்ளது. இதை ஒரு லாபகரமான நிறுவனமாக மாற்றுவதே எங்கள் குறிக்கோள்” என்று அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் இந்த முயற்சி, மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் உள்கட்டமைப்பை விமான பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புக்காகப் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறது, இது உலகளாவிய விமான நிறுவனங்களை ஈர்க்கும்.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு