நஷ்டத்தில் இயங்கும் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை விமான பராமரிப்பு மையமாக மாற்றபோவதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (07) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
பட்ஜெட் மீதான குழுநிலை விவாதத்தின் போது பேசிய அமைச்சர், மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை இலாபகரமான முயற்சியாக மாற்றுவதற்கு பொருத்தமான வெளிநாட்டு கூட்டாளியுடன் ஒத்துழைக்க அரசாங்கம் விரும்புவதாகக் கூறினார்.
“இந்த விமான நிலையம் ரூ. 36.5 பில்லியன் செலவில் கட்டப்பட்டது, கடந்த ஐந்து ஆண்டுகளில், இது மொத்தம் ரூ. 38.5 பில்லியன் இழப்பைச் சந்தித்துள்ளது. இதை ஒரு லாபகரமான நிறுவனமாக மாற்றுவதே எங்கள் குறிக்கோள்” என்று அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் இந்த முயற்சி, மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் உள்கட்டமைப்பை விமான பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புக்காகப் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறது, இது உலகளாவிய விமான நிறுவனங்களை ஈர்க்கும்.
Trending
- நாமால் ராஜபக்சவுக்கு எதிரான அவதூறு, குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு
- மாகாண சபைத் தேர்தல் – “சிங்கள அரசியல் கூட்டு இரகசியம்”
- பாகிஸ்தானில் நிலநடுக்கம், தேசங்கள் இல்லை. மக்கள் வெளியேற்றம்.
- படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25வது நினைவு தினம் அனுஸ்டிப்பு
- வேகம் குறையாத ’டியூட்’ – 3 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா?
- இஷாராவிற்கு தங்குமிடம் வழங்கிய கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த ஆண் கைது
- 200 ஆண்டுகள் பழமையான அருங்காட்சியகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பிரான்ஸ் மன்னரின் வைர நகைகள்
- தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் 26 லட்சம் விளக்கேற்றி உலக சாதனை