Wednesday, August 13, 2025 11:16 am
இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் நீதிகோரிய கவனயீர்ப்பு போராட்டம் இன்று (13) புதன்கிழமை மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி மனித புதைகுழி, முல்லைத்தீவு தமிழ் இளைஞன் கொல்லப்பட்ட சம்பவங்களுக்கு நீதிகோரியும், தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு நீதிகோரியும், மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவிடத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் ஆகியோரும் மட்டக்களப்பு மாநகரசபை மேயர் முதல்வர் சிவம்பாக்கியநாதன், பிரதி மேயர் தினேஸ், தவிசாளர்கள், மாநகரசபை உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள், முன்னாள் மாநகரசபை மேயர் தி.சரவணபவன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

