இந்தியாவின் மகாராஷ்டிராவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்காகத் ஆரம்பிக்கப்பட்ட “லட்கி பஹின் யோஜனா” திட்டத்தில் பாரிய மோசடியொன்று பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், ஆண்டுக்கு இந்திய ரூபாய் 2.5 இலட்சத்திற்கும் குறைவாக வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மாதம் 1,500 இந்திய ரூபாயினை வழங்குகின்றது.
இந்தநிலையில் 14,298 ஆண்கள் போலியாகப் பதிவு செய்து, 21.44 கோடி இந்திய ரூபாய் உதவித் தொகையைப் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து குறித்த பணம் வசூலிக்கப்படும் என மகாராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
இந்த மோசடி குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Trending
- கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
- கர்ப்பிணிகளுக்கு உணவுப் பொதிகள் – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ்
- வவுனியாவில் உணவகங்களில் உள்ள புகைத்தல் பகுதிகளுக்கு தடை
- 72 பேரைக் கைது செய்வதற்கு சிவப்பு அறிவிப்பு – அமைச்சர் ஆனந்த விஜேபால
- ‘பாலஸ்தீனம் என்ற நாடு இருக்காது’ எச்சரிக்கிறது இஸ்ரேல்
- சார்லி கிர்க்கின் படுகொலை சந்தேக நபரின் படங்கள் வெளியீடு
- சஷீந்திர ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்
- உக்ரைனுக்கு இளவரசர் ஹரி திடீர் விஜயம்