Monday, February 3, 2025 10:53 am
தென்னாப்பிரிக்காவிற்கு வழங்கப்படும் அனைத்து நிதியுதவிகளையும் துண்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை,கூறினார்,
“தென்னாப்பிரிக்கா நிலத்தை அபகரித்து வருகிறது, மேலும் சில வகுப்பினரை மிகவும் மோசமாக நடத்துகிறது. அமெரிக்கா அதற்கு ஆதரவாக நிற்காது, நாங்கள் செயல்படுவோம். மேலும், இந்த சூழ்நிலையின் முழு விசாரணை முடியும் வரை, தென்னாப்பிரிக்காவிற்கு எதிர்காலத்தில் வழங்கப்படும் அனைத்து நிதியுதவிகளையும் நான் நிறுத்துவேன்” அவர் கூறினார்.
2023 ஆம் ஆண்டில், அமெரிக்க அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின்படி, தென்னாப்பிரிக்காவிற்கு கிட்டத்தட்ட 440 மில்லியன் டொலர் உதவியை அமெரிக்கா வழங்கியது.

