நேற்று கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் மட்டக்குளிய, ராவத்த பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது 45 வயதுடைய சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலுக்க அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேக நபரிடமிருந்து 6.6 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸார் சந்தேக நபரின் வீட்டிற்கு சென்ற போது அங்கு திருடப்பட்டதாகவும், அதன் உரிமையை உறுதிப்படுத்தாததாகவும் சந்தேகிக்கப்படும் 170 சைக்கிள்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள சந்தேக நபர் மட்டக்குளிய பொலிஸ் நிலையத்தில் தடுத்த வைக்கப்பட்டுள்ளது.