மோட்டார் சைக்கிள் இல்லாமல் தலைக்கவசம் அணிந்திருப்பவர்களையும் சந்தேகப்படும்படி நடந்துகொள்பவர்களையும் சோதனை செய்ய பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது.
தலைக்கவசம் அணிந்திருப்பவர்களால் குற்றங்கள் அதிகரித்து வருவதால், பொலிஸ் தலைமையகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பாதுகாப்பிற்காக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் மட்டுமே தலைக்கவசம் அணிய வேண்டும் என்று பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.