ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு இன்று (30) அந்தந்த அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, 600,768 பயனாளிகளுக்கு ரூ. 3,003,840,000 தொகை பங்கிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பயனாளிகள் நாளை முதல் அஸ்வெசும பயனாளி கணக்கிலிருந்து தங்களுக்கு உரிய தொகையைப் பெற முடியும்.