இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை [4]இரவு நடந்த விபத்தில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்,11 பேர் காயமடைந்தனர் என்று புதன்கிழமை காலை ஜகார்த்தா தேடல் மற்றும் மீட்பு அலுவலகத்தின் தலைவர் தேசியானா கார்த்திகா பஹாரி உறுதிப்படுத்தினார். நள்ளிரவுக்கு சற்று முன்பு போகோர் ரீஜென்சியில் உள்ள சியாவி டோல் கேட் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் ஒரு லாரி பிரேக் செயலிழந்ததால், டோல்கேட்டில் இரண்டு கார்கள் மோதியதில் பலத்த சேதம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
செவ்வாய்க்கிழமை ஜகார்த்தா நேரப்படி இரவு 11:30 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், ஆறு வாகனங்கள் சேதமடைந்ததாகவும் போகோர் ரீஜென்சி காவல்துறைத் தலைவர் எகோ பிரசெட்யோ தெரிவித்தார்.
Trending
- டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வழங்கும் செயற்றிட்டம்
- பாலியல் வன்கொடுமை குற்றம் சுமத்தப்பட்ட கனடிய வீரர்கள் விடுதலை
- உலகின் மிகச்சிறிய பாம்பு 20 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது
- ட்ரம்பின் தடையால் திருநங்கை கேடட்டின் கனவு தடைப்பட்டது
- ஜனாதிபதி மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்
- ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் : பிரதமர் பதிலளிப்பு
- 219 மருந்து விற்பனை நிலையங்களின் உரிமம் இடைநிறுத்தம்
- இலங்கை, பிரான்ஸ் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு கைச்சாத்து