Sunday, March 22, 2026 9:15 pm
சூடானில் “கிழக்கு டார்ஃபூரில் உள்ள மருத்துவமனை மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 64 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 89 பேர் காயமடைந்ததாகவும் உலக சுகாதார அமைப்பு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
சூடான் இராணுவத்திற்கும் துணை இராணுவப் படையான விரைவு ஆதரவுப் படைகளுக்கும் இடையிலான போரில் நிகழும் அட்டூழியங்களை ஆவணப்படுத்தும் சூடானிய உரிமைக் குழுவான ‘அவசரகால வழக்கறிஞர்கள்’, எல்-டேய்ன் போதனா மருத்துவமனையைத் இராணுவ ஆளில்லா விமானம் தாக்கியதாகத் தெரிவித்துள்ளது.
தாக்குதல்களுக்கான உலக சுகாதார அமைப்பின் கண்காணிப்பு அமைப்பு, வெள்ளிக்கிழமை நடந்த சம்பவத்தை “உறுதிப்படுத்தப்பட்டது” எனக் குறிப்பிட்டது, ஆனால் அதன் துல்லியமான இருப்பிடத்தைத் தெரிவிக்கவில்லை.

