சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அந்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் கலைத்துவ பெருமை மிக்க யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளங்களான தடைசெய்யப்பட்ட நகரத்தையும் சீனப் பெருஞ்சுவரையும் பார்வையிட்டார்.
சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் 2025 ஆம் ஆண்டுக்கான பெண்கள் குறித்த உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கடந்த 11ம் திகதி சீனாவுக்கு புறப்பட்டு சென்றார்.
“ஒரு பகிரப்பட்ட எதிர்காலம் பெண்களின் முழுமையான வளர்ச்சிக்கான புதிய மற்றும் துரிதப்படுத்தப்பட்ட செயல்முறை” என்ற கருப்பொருளின் கீழ் பீஜிங்கில் பெண்கள் குறித்த உலகளாவிய தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
