யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் (19) செவ்வாய்க்கிழமை நீர்க்குழாய்களை மண்ணில் புதைக்கும் பணிகளுக்காக நிலத்தினை அகழ்ந்த போது ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
குழாய்களை புதைப்பதற்காக நிலத்தினை அகழ்ந்த போது சந்தேகத்திற்கிடமான முறையில் உரை பை ஒன்று காணப்பட்டதையடுத்து , கொடிகாம பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த உரை பையை மீட்டு சோதனையிட்ட போது அவற்றுக்குள் வெடிக்காத நிலையில் துப்பாக்கி ரவை கோர்வைகள் காணப்பட்டுள்ளன.
துப்பாக்கி ரவை கோர்வைகளை மீட்டு கொடிகாம பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்ற பொலிஸார் அவற்றுள் 1,393 துப்பாக்கி ரவைகள் காணப்பட்டதாகவும் , அவற்றினை நீதிமன்றில் பாரப்படுத்தி நீதிமன்ற உத்தரவில் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.
