குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு வாடகைத் தாய் முறை ஒரு வரமாக இருக்கும் நிலையில், அதற்கு மாற்றாக செயற்கை கருப்பை சுமக்கும் ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த தொழில்நுட்பம், எதிர்காலத்தில் மனித குழந்தைகளைப் பெற்றெடுக்கும் முறையை முற்றிலும் மாற்றியமைக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கர்ப்ப கால ரோபோக்களில் செயற்கை கருப்பை பொருத்தப்பட்டு, ஒரு குழாய் மூலம் கருவிற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் செலுத்தப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், மனித தலையீடு இல்லாமல் கருவின் வளர்ச்சி கண்காணிக்கப்படும். இந்த முயற்சி, குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிகளுக்கு ஒரு புதிய வழியை திறக்கும் என நம்பப்படுகிறது.
இருப்பினும், இந்த தொழில்நுட்பம் பல நெறிமுறை சார்ந்த கேள்விகளை எழுப்பியுள்ளது. மனித இனப்பெருக்கத்தை ஒரு இயந்திரத்தின் மூலம் நடத்துவது சரியானதா என்பது போன்ற விவாதங்கள் உலக அளவில் எழுந்துள்ளன. இந்த தொழில்நுட்பம் குறித்த தொடர் ஆய்வுகள் மற்றும் கடுமையான நெறிமுறை கட்டுப்பாடுகளுக்குப் பின்னரே, பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Trending
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு
- ChatGPT க்கு போட்டியாக களமிறங்கிய இந்திய செயலி
- அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை