கட்டுநாயக்க – சீதுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 51 வயது நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்டவர் நீர்கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்கூட்டில் காயமடைந்தவர் தனது கடையில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டு துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.