2024 க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாதம் புத்தாண்டிற்க்குப் பிறகு வெளியிடப்படும் என எதிர்பார்ப்பதாக தேர்வுகள் ஆணையர் ஜெனரல் அமித் ஜெயசுந்தர கூறுகிறார்.
பரீட்சை பெறுபேறுகள் குறித்து ஊடகங்கள் வினவியபோது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
மொத்தம் 333,183 மாணவர்கள் தேர்வை எழுதினர்.
அவர்களில் 253,390 பேர் பாடசாலை மாணவர்கள் மற்றும் 79,793 பேர் தனியார் மாணவர்கள் ஆகும்.
இந்தப் பரீட்சை, 2024 நவம்பர் 25 தொடங்கி டிசம்பர் 31வரை நாடு முழுவதும் 2312 தேர்வு மையங்களில் நடைபெற்றது.
உயர்தரப் பரீட்சையின் உயிரியல் அமைப்புகள் தொழில்நுட்பம் (66) பாடத்திற்கான நடைமுறைத் தேர்வுகள் 2025 பிப்ரவரி 08-10 வரை நடைபெற்றன.