இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு விஷேட அறிவிப்பை இலங்கை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலில் பணிபுரியும் பலர் தற்போது விடுமுறையில் நாட்டில் உள்ளனர்.தற்போது நிலவும் மோதல் சூழ்நிலை மற்றும் விமான நிலையங்கள் மூடப்பட்டிருப்பதால், இலங்கையர்கள் தங்கள் திட்டமிடப்பட்டதிதிகளில் இஸ்ரேலுக்குத் திரும்ப முடியாவிட்டால், அவர்கள் உடனடியாக தூதரகத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்று இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மீள் நுழைவு விசா காலாவதியானால், அந்த நபர்கள் இஸ்ரேலுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தூதர் நிமல் பண்டார தெரிவித்தார். இந்தச் சூழலில், இது தொடர்பாக இலங்கையர்கள் தூதரகத்திற்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மறு நுழைவு வி
சா காலத்தை நீட்டிப்பது குறித்து இஸ்ரேல் அரசாங்கத்துடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்று தூதர் நிமல் பண்டார மேலும் குறிப்பிட்டார்.
தற்போது நாட்டிலுள்ள அனைத்து இலங்கையர்களும் தங்கள் தொடர்புடைய விவரங்களை 071 844 7305, 071 683 3513 அல்லது 071 974 2095 என்ற எண்களில் ஒன்றிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதேவேளை டெல் அவிவில் உள்ள பென் குரியன் விமான நிலையம் சர்வதேச விமானங்களுக்கு மூடப்பட்டதால் தற்போது இஸ்ரேலுக்குள் நுழைய முடியாத இலங்கையர்கள் ஜோர்டான் மற்றும் எகிப்து வழியாக பயண ஏற்பாடுகளைச் செய்யலாம் என்று இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்தின் தூதர் நிமல் பண்டாரா உறுதிப்படுத்தியுள்ளார்.
Trending
- வாக்கெடுப்பில் பாரபட்சம் குற்றம் சாட்டுகிறார் ரிசா சரூக்
- இலங்கையர் இருவர் இஸ்ரேலில் காயம்
- புதைகுழி அகழ்வுக்கு பல்கலை மாணவர்களையும் அனுமதிக்க நடவடிக்கை
- கொமட்டை திருடியவர் கைது
- இரகசிய வாக்கெடுப்பில் கொழும்பை கைப்பற்றியது என்பிபி
- வவுனியா மேயராக காண்டீபன் தெரிவு
- ஏர் இந்தியா விமானத்தின் இரண்டு கறுப்புப் பெட்டிகளும் மீட்கப்பட்டன
- இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் இங்கிலாந்து எச்சரிக்கை