வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகி நேற்று வெளியாகிய “மிஸிஸ் அண்ட் மிஸ்டர்” திரைப்படத்தில்,தன்னுடைய பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் “மிஸிஸ் அண்ட் மிஸ்டர்” திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இளையராஜாவின் பாடலை சோனி நிறுவத்திடம் அனுமதி பெற்றுதான் பயன்படுத்தியதாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
“மிஸிஸ் அண்ட் மிஸ்டர்” படத்தில் இளையராஜா இசையில் உருவான மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தின் “ராத்திரி சிவ ராத்திரி” பாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த பாடலுக்கான உரிமையை பணம் கொடுத்து சோனி நிறுவனத்திடம் வாங்கியதாக நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.
மேலும், இளையராஜா வழக்குத் தொடர வேண்டும் என்றால், அந்த நிறுவனத்தின் மீதுதான் வழக்கு தொடரவேண்டும் என அவர் தெரிவித்தார்.
Trending
- நாமால் ராஜபக்சவுக்கு எதிரான அவதூறு, குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு
- மாகாண சபைத் தேர்தல் – “சிங்கள அரசியல் கூட்டு இரகசியம்”
- பாகிஸ்தானில் நிலநடுக்கம், தேசங்கள் இல்லை. மக்கள் வெளியேற்றம்.
- படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25வது நினைவு தினம் அனுஸ்டிப்பு
- வேகம் குறையாத ’டியூட்’ – 3 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா?
- இஷாராவிற்கு தங்குமிடம் வழங்கிய கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த ஆண் கைது
- 200 ஆண்டுகள் பழமையான அருங்காட்சியகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பிரான்ஸ் மன்னரின் வைர நகைகள்
- தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் 26 லட்சம் விளக்கேற்றி உலக சாதனை