இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோருக்கிடையே கடந்த திங்கட்கிழமை பீஜிங்கில் நடந்த சந்திப்பின் பின்னர் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மீண்டும் நேரடி விமான சேவை நடத்துவதற்கான முடிவு எட்டப்பட்டது.
கடந்த நவம்பரில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான விலக்கல் செயல்முறை நிறைவடைந்த பின்னர் ஒரு பெரிய இராஜதந்திர முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், புது டெல்லியும்பீஜிங்கும் இருதரப்பு பரிமாற்றங்களை மேம்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளை முடிவு செய்தன.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 75 வது ஆண்டு நிறைவு என்பதால், ஒருவருக்கொருவர் சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் பொதுமக்களிடையே பரஸ்பர நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும் பொது இராஜதந்திர முயற்சிகளை இரட்டிப்பாக்க பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை இரு தரப்பினரும் அங்கீகரிக்கின்றனர்.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!