வடமராட்சியை கைப்பற்றும் நோக்கில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ‘லிபரேசன் ஒப்பரேசன்’ இராணுவ நடவடிக்கையின் போது 1987 மே 26 – 31 வரை இடம்பெற்ற அல்வாய் படுகொலை 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் – மாலைசந்தை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை [1] மாலைசந்தை மைக்கல் விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
மைக்கல் விளையாட்டு கழகம், மைக்கல் நேசக்கரம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நினைவேந்தலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எஸ். சுகிர்தன், தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் உட்படல் பலர் கலந்துகொண்டனர்.