Friday, December 26, 2025 2:46 pm
பங்களாதேஷின் ராஸ்பாரி மாவட்டத்தில் 29 வயதான அமிர்த மண்டல் என்ற இந்து இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் பாங்ஷா பகுதியில் ஒரு கும்பலை வழிநடத்தி வந்ததாகவும் புதன்கிழமை இரவு ஒருவரது வீட்டில் பணம் கேட்டு மிரட்டியபோது திருடன் என நினைத்து திரண்ட ஊர் மக்களால் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அமிர்த மண்டலின் சகா ஒருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலை குறித்து கருத்து தெரிவித்துள்ள பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கம், இது மத ரீதியான தாக்குதல் அல்ல என்றும், தனிப்பட்ட குற்றச் செயல்களின் பின்னணியில் நடந்த வன்முறை என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளது.
கடந்த வாரம் மைமென்சிங் பகுதியில் தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் ஒருவர் தெய்வ நிந்தனை குற்றச்சாட்டில் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் தற்போது இச்சம்பவம் அரங்கேறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

