Sunday, November 2, 2025 1:22 pm
யாழ்.மல்லாகம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் ச.சயோசியன் காணாமல் போயுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டினை இளைஞனின் தந்தையே மேற்கொண்டுள்ளார்.

மல்லாகம், நரியிட்டான் பகுதியில் வசித்து வந்த சயோசியன் கடந்த 31.10.2025 வெள்ளிக்கிழமை வீட்டைவிட்டு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
தகவல் தெரிந்தவர்கள் பெற்றோர் அல்லது தெல்லிப்பழை பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

